திரில்லர் வெப்தொடரில் த்ரிஷா | மூன்றாவது முறை கர்ப்பமா : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கரீனா கபூர் | வாரணாசி படத்துக்காக 1500 கலைஞர்களிடம் குரல் பரிசோதனை செய்யும் ராஜமவுலி | 4 படங்களுக்கு பிறகு டூப் நடிகர்களை தவிர்த்த பிரபாஸ் | இருமுடி, பெத்லகேம் குடும்ப யூனிட் மற்றும் கலீபா பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் | முதன்முறையாக ஜெயராம் ஜோடியாக நடிக்கும் சிம்ரன் | ஆஸ்கர் விருதை தவற விட்ட தமிழ் படங்கள் | பொல்லாதவன், ராஜா ராணி மாதிரி இருமுடி கட்டு : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் | காதல் படத்தில் அர்ஜூன்தாஸ் ஹீரோவா? : படம் தயாரிக்க மறுத்த தயாரிப்பாளர்கள் | செப்டம்பர் 1 முதல் படம் ரிலீஸ் இல்லை : வெறும் மிரட்டலா...? பேச்சுவார்த்தை நடக்குமா? |

சிவாஜி, எம்ஜிஆர், பி.யூ.சின்னப்பா போன்றோர் இரண்டு மூன்று கேரக்டர்களில் நடித்தனர். முதன் முதலாக 9 கேரக்டர்களில் 'நவராத்திரி' படத்தில் சிவாஜி நடித்தார். அதேபோல முதன் முறையாக ஒரே படத்தில் அதிக தோற்றத்தில் நடித்தவர் எம்.என்.நம்பியார், 'திகம்பர சாமியார்' என்ற படத்தில் 12 தோற்றங்களில் நடித்தார். சிவாஜி பின்னர் அதனையும் முறியடித்தார். 'மருதநாட்டு வீரன்' என்ற படத்தில் 14 தோற்றங்களில் நடித்தார்.
மருதநாட்டு இளவரசி ஜமுனாவின் பாதுகாப்பு அதிகாரி சிவாஜி, ஒரு கட்டத்தில் இருவரும் காதலிப்பார்கள். அமைச்சரான பி.எஸ்.வீரப்பா, சிவாஜி மீது பழியொன்றை சுமத்தி நாடு கடத்தி விடுவார். பின்னர் ஜமுனாவை மணந்து தானே மன்னராக திட்டமிடுவார். நாடு கடத்தப்பட்ட சிவாஜி பல மாறுவேடங்களை போட்டு அரச ரகசியங்களை கண்டுபிடித்து படை திரட்டி நாட்டையும், காதலியையும் மீட்பதுதான் கதை.
பெரும்பாலான சரித்திர படங்களின் கதை இப்படித்தான் இருக்கும். ஜமுனாவின் அழகு இருந்தும், சிவாஜி 14 தோற்றங்களில் நடித்தும் படம் தோல்வி அடைந்தது. இதற்கு காரணம் பார்த்து சலித்த கதை, வலுவில்லாத திரைக்கதை. ராணி லலிதாங்கி, மர்ம வீரன், ராஜா தேசிங்கு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய டி.ஆர்.ரகுநாத்தான் இந்த படத்தை இயக்கி இருந்தார்.