இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் நடிகர்களில் விஜய்க்குத்தான் கேரளாவில் ரசிகர்கள் அதிகம். விஜய் நடித்து வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் அங்குள்ள மலையாள ரசிகர்கள் தமிழ் ரசிகர்களைப் போலவே வரவேற்று கொண்டாடுவார்கள்.
ஆனால், பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள 'மாஸ்டர்' படம் கேரளாவில் வெளியாகாத சூழல் ஒன்று உருவானது. கேரளாவில் உள்ள தியேட்டர்களுக்கு அந்த மாநில அரசு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியது. இருப்பினும் மாநில அரசிடமிருந்து பல சலுகைகளை வேண்டி கேரளா பிலிம் சேம்பர் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என்றது.
அதன் காரணமாக 'மாஸ்டர்' படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. அங்கு முன்னணி நடிகர் ஒருவரின் பார்ட்னர் தான் திரைப்பட சங்கம் ஒன்றின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். தமிழ்ப் படமான 'மாஸ்டர்' படம் கேரளாவில் பெரிய அளவில் வெளியாவதை அவர் விரும்பவில்லை என்று கேரள விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
'மாஸ்டர்' படத்தைத் திரையிட முடியாமல் தடை செய்யும் நோக்கில் வேறு ஏதாவது முயற்சிகள் நடந்தால் அதை எதிர்க்கவும் கேரள விஜய் ரசிகர்கள் தயாராக இருந்தார்களாம்.
இந்நிலையில் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என்று சொன்னதை கேரளா பிலிம் சேம்பர் மறு பரிசீலனை செய்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது என்கிறார்கள். அப்படி நடந்தால் 'மாஸ்டர்' படம் கேரளாவில் வெளியாகலாம். விரைவில் இது பற்றிய முழுமையான தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.