கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

தமிழ் நடிகர்களில் விஜய்க்குத்தான் கேரளாவில் ரசிகர்கள் அதிகம். விஜய் நடித்து வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் அங்குள்ள மலையாள ரசிகர்கள் தமிழ் ரசிகர்களைப் போலவே வரவேற்று கொண்டாடுவார்கள்.
ஆனால், பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள 'மாஸ்டர்' படம் கேரளாவில் வெளியாகாத சூழல் ஒன்று உருவானது. கேரளாவில் உள்ள தியேட்டர்களுக்கு அந்த மாநில அரசு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியது. இருப்பினும் மாநில அரசிடமிருந்து பல சலுகைகளை வேண்டி கேரளா பிலிம் சேம்பர் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என்றது.
அதன் காரணமாக 'மாஸ்டர்' படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. அங்கு முன்னணி நடிகர் ஒருவரின் பார்ட்னர் தான் திரைப்பட சங்கம் ஒன்றின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். தமிழ்ப் படமான 'மாஸ்டர்' படம் கேரளாவில் பெரிய அளவில் வெளியாவதை அவர் விரும்பவில்லை என்று கேரள விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
'மாஸ்டர்' படத்தைத் திரையிட முடியாமல் தடை செய்யும் நோக்கில் வேறு ஏதாவது முயற்சிகள் நடந்தால் அதை எதிர்க்கவும் கேரள விஜய் ரசிகர்கள் தயாராக இருந்தார்களாம்.
இந்நிலையில் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என்று சொன்னதை கேரளா பிலிம் சேம்பர் மறு பரிசீலனை செய்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது என்கிறார்கள். அப்படி நடந்தால் 'மாஸ்டர்' படம் கேரளாவில் வெளியாகலாம். விரைவில் இது பற்றிய முழுமையான தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.