'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
கொரோனா பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப் போன பல முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து தியேட்டர்களில் வெளியாக இருக்கின்றன. வரும் பொங்கலுக்கு விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன் போன்ற படங்கள் தியேட்டரில் ரிலீசாகின்றன.
வழக்கமாக இது போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும் போதும், தியேட்டர்களில் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுவதுண்டு. தற்போது 50% சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில், இம்முறையும் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப் படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் அரவிந்த்சாமி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும்போது திரைப்பட டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.