தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து விட்டது. இறுதிப் போட்டிக்கு ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.
ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து போட்டியிலிருந்து வெளியேற விரும்பும் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை வந்த நடிகர் கவின் பிக்பாஸ் கொடுத்த தொகையைப் பெற்றுக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார்.
இந்த சீசனிலும் அதே போல் பிக் பாஸ் குறிப்பிட்ட தொகையை வழங்க இருக்கிறாராம். இம்முறை பிக்பாஸ் கொடுக்கும் தொகையைப் பெற்றுக் கொண்டு ரம்யா பாண்டியன் வெளியேற இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. நாளை அல்லது அதன் மறுநாள் ஒளிபரப்பாகும் எபிசோடில் இது பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.
வரும் 17ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அன்றைய தினம் பிக் பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்லப் போகும் போட்டியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.