தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து விட்டது. இறுதிப் போட்டிக்கு ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.
ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து போட்டியிலிருந்து வெளியேற விரும்பும் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை வந்த நடிகர் கவின் பிக்பாஸ் கொடுத்த தொகையைப் பெற்றுக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார்.
இந்த சீசனிலும் அதே போல் பிக் பாஸ் குறிப்பிட்ட தொகையை வழங்க இருக்கிறாராம். இம்முறை பிக்பாஸ் கொடுக்கும் தொகையைப் பெற்றுக் கொண்டு ரம்யா பாண்டியன் வெளியேற இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. நாளை அல்லது அதன் மறுநாள் ஒளிபரப்பாகும் எபிசோடில் இது பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.
வரும் 17ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அன்றைய தினம் பிக் பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்லப் போகும் போட்டியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.