தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பேட்ட மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்ந்திருப்பவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். பொங்கல் ரிலீஸாக இவர் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியாகியுள்ள நிலையில் பஹத் பாசிலுடன் ஜோடியாக நடித்து நின்றுபோன படம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார் மாளவிகா. கடந்த 2013ல் பட்டம்போலே என்கிற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமான மாளவிகா மோகனனுக்கு 2015ல் பஹத் பாசில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.
பழங்குடி இன மக்கள் இன்று சந்தித்துவரும் பொருளாதார ரீதியான பிரச்சனைகளையும் பற்றிய கதையம்சத்துடன் உருவாகி இருந்த, அந்தப்படத்தில் ஆதிவாசிப்பெண்ணாக நடித்தார் மாளவிகா மோகனன். கிட்டத்தட்ட 20 நாட்கள் அந்தப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது. இன்னும் 30 சதவீத காட்சிகளே படமாக்கப்பட்ட வேண்டும் என்கிற நிலையில் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, எந்த காரணங்களும் தெரியப்படுத்தாமல் அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டது என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.