ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பொதுவாக நடிகைகள் ரொம்பவே உணர்ச்சிவசப்படக்கூடிய வர்கள். யாரையாவது காதலித்தால் உடனே அவர்களின் பெயரை தங்களது உடம்பில் ஏதாவரு ஒரு பகுதியில் பச்சைக்குத்திக்கொள்வார்கள். அப்படித்தான் முன்பு பிரபுதேவாவை காதலித்தபோது அவரது பெயரை தனது கையில் பச்சைக் குத்திக்கொண்டார் நயன்தாரா. காதல் முறிந்த பிறகு அந்த பெயரை வேறு டாட்டூவாக மாற்றினார்.
அதேபோல்தான் கடந்த ஆண்டில் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா விஜயகுமார். அதையடுத்து முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்து கொள்ளாத ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக வனிதாவை நோக்கி ஏராளமான விமர்சனக்கணைகள் பாய்ந்தன.
ஆனபோதும் கலங்காத வனிதா, பீட்டர் பாலுடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வனிதா-பீட்டர் பாலின் உறவும் முடிவுக்கு வந்து, வனிதாவை விட்டு வெளியேறினார் பீட்டர் பால்.
ஆனால் வனிதாவும், பீட்டர் பாலும் சேர்ந்து வாழ்ந்து வந்தபோது ஒருவர் பெயரை இன்னொருவரின் கையில் பச்சைக்குத்திக்கொண்டனர். இந்நிலையில் தற்போது தனது கையில் உள்ள பீட்டர்பாலின் பெயரை வேறு ஒரு சிம்பிளாக மாற்றியுள்ளார் வனிதா. அதை மாற்றுவதையும் வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதோடு, இனிமேல் யாருடைய பெயரையும் எனது கையில் பச்சைக்குத்த மாட்டேன் என்றும் உறுதி எடுத்துள்ளார் வனிதா.