பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' | மலைவாழ் மக்களின் கல்வியை வலியுறுத்தும் 'நறுவீ' | பிரபல டிசைனர் குமார் காலமானார் | ‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு உதயநிதி, இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? |
நடிகரின் விமலின் சொந்த ஊர் மணப்பாறை அருகே உள்ள பண்ணாங்கொம்பு. விமலின் பூர்வீக வீடு இங்கு உள்ளது. அவரது வீட்டுக்கு எதிரில் இருக்கும் காலி மைதானத்தில் விளக்குதூண் ஒன்று உள்ளது. இதனை ஊர் மக்கள் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர். சமீபத்தில் விளக்குதூணை சுற்றி சிறிய மேடை ஒன்றை ஊர்காரர்கள் அமைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல், விளக்கு தூண் மேடையை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளி உள்ளது. இது விமல் குடும்பத்தினரின் வேலை என்று அதே ஊரைச் சேர்ந்த கோவில் பூசாரி செல்வம் புத்தாநத்தம் போலீசில் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தா உத்தரவிட்டுள்ளார்.