ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
சென்னை 28 படம் தான் தமிழ் சினிமாவில் கிரிக்கெட்டை மையப்படுத்திய முதல் படம். அதன்பிறகு ஜீவா, ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை 28 2ம் பாகம் உள்பட பல படங்கள் வந்திருக்கிறது. இப்போது திடல் என்ற பெயரில் மீண்டும் ஒரு கிரிக்கெட் படம் உருவாகி உள்ளது.
கிரவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, நடித்திருக்கிறார் பி.பிரபாகரன். அவருடன் பிரபு, அன்பு, சாகுல், யோகேஷ், கர்ணா என 5 நாயகர்கள் அறிமுகமாகிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் வினோதினி, ராட்சசன் கிறிஸ்டோபர், சரண் ரவிசந்திரன், நடித்துள்ளார்கள் .இப்படத்திற்கு ஒளிப்பதிவு சேகர்ராம், ஜெரால்டு. இசை ஸ்ரீசாய் தேவ். திரைக்கதை, எழுதி, இயக்கி இருப்பவர் எஸ்.கே.எஸ்.கார்த்திக் கண்ணன்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இது ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள் பற்றிய கதை .முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த கிராமத்துச் சிறுவர்கள் வளர்ந்து கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஊரில் உள்ள சிலர் அவர்களை இங்கு விளையாடக்கூடாது என்று அசிங்கப்படுத்துகிறார்கள். அவர்கள் பக்கத்து ஊர்களுக்குப் போய் விளையாட. அங்கும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதனால் தங்களுக்கான ஒரு விளையாட்டு திடலை அடைந்தே தீருவது என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். அது நடந்தா என்பதுதான் படத்தின் கதை. என்றார்.