இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சிவா இயக்க, அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'வேதாளம்'. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி ஆசைப்பட்டார். மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாக இப்படத்திற்கான கதை விவாதம் கூட நடந்து முடிந்ததாகத் தகவல் வெளியானது.
சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோரிடம் கூட பேச்சு வார்த்தை நடத்தியதாகச் சொன்னார்கள். இதனிடையே, தற்போது நடித்து வரும் 'ஆச்சார்யா' படத்திற்குப் பிறகு 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கத் தயாராகிவிட்டார் சிரஞ்சீவி. இதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது.
'வேதாளம்' ரீமேக்கை தள்ளி வைத்துவிட்டார் எனச் சொல்கிறார்கள். இப்படத்திற்காக அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டி உள்ளதால், கொரோனா தொற்று மிகவும் குறைந்த பிறகு இப்படத்தில் நடிக்கலாம் என அவர் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடித்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம்தான் சிரஞ்சீவி ரீ-என்ட்ரி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.