பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தற்போது பாலிவுட் சினிமா வரை கொடி நாட்டி இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், காமெடியன் என கலவையான வேடங்களில் நடித்து வரும் அவர் சமீபகாலமாக சில சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கிக் கொண்டு வருகிறார்.
அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் உருவாக இருந்த 800 படம் மற்றும் துக்ளக் தர்பார் படத்தில் சீமானை அட்டாக் செய்திருப்பது போன்ற டீசர் வெளியான போதும் பரபரப்பு வளையத்திற்குள் வந்தார். அதன்பிறகு தனது பிறந்த நாளின்போது பட்டாக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டினார். அந்த போட்டோவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படியான நிலையில், நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, மாஸ்டர் படம் மூலம் திரையரங்குகளுக்கு ரசிகர்களை மீண்டும் கொண்டு வந்ததற்காக விஜய் உள்பட மாஸ்டர் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதையடுத்து அவரிடத்தில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் உருவாக இருந்த 800 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, 800 படம் குறித்த பிரச்சினை முடிந்து விட்டது. அதனால் அதை மீண்டும் கிளற வேண்டாம் என்று அதுகுறித்து பதிலளிக்க மறுத்து விட்டார் விஜய் சேதுபதி.