இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கடந்த சில நாட்களாக திரையுலகத்தில் ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. அப்படத்தின் தயாரிப்பாளரான சஷிகாந்த், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் தனுஷைப் பின் தொடர்வதிலிருந்து விலகிவிட்டார். மேலும், அவர்களது யு டியூப் சேனலில் வைத்திருந்த ஜகமே தந்திரம் பட போஸ்டரையும் நீக்கிவிட்டார்.
இதனால், கோபமடைந்த தனுஷ் ரசிகர்கள் நேற்று டுவிட்டர் தளத்தில் தயாரிப்பாளர் சஷிகாந்தை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்ணன் ஏப்ரல் 2021ல் தியேட்டர்களில் வெளியாகிறது. தேவையான சமயத்தில் உற்சாகமூட்டும் தேவையான ஒரு செய்தி. தியேட்டர் ஓனர்கள், வினியோகஸ்தர்கள், மற்றும் சினிமா மற்றும் தியேட்டர்களை நம்பி வாழும் அனைவரையும் நினைத்து வெளியிடுவதற்கு, உங்களுக்கு வேறு வழிகள் இருந்தாலும், நன்றி தாணு சார். என்னுடைய ரசிகர்கள் சார்பாக மிகப் பெரும் நன்றி. இது அவர்களுக்கு பல அர்த்தத்தைக் கொடுக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷின் இந்த அறிக்கை ஜகமே தந்திரம் தயாரிப்பாளரை மறைமுகமாகக் குறிப்பிடுவது போலவும், தன் ரசிகர்களுக்கு ஆதரவு சொல்வது போலவும் உள்ளது.