லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
2020ம் ஆண்டு கொரோனா தொற்று தாக்கத்தால் திரைப்படத் தொழிலே நசிந்து போய்விட்டது. அதிலிருந்து எப்படியாவது மீள மாட்டோமா என்று ஏங்கித் தவித்தவர்கள் ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. பொங்கல் வெளியீடாக வந்த மாஸ்டர் படம் தியேட்டர்களுக்கு மீண்டும் மக்களை வரவழைத்துவிட்டது. இந்நிலையில் நேற்று பிப்ரவரி 1 முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கிவிட்டது.
அதன் காரணமாக கடந்த வருடம் வெளியாக வேண்டிய பல படங்கள் மற்றும் இந்த வருட வெளியீட்டிற்காகத் தயாரான படங்கள் அடுத்தடுத்து வெளிவரக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இனி வரும் வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சில முக்கிய படங்களின் விவரம். இவற்றில் சில படங்களின் வெளியீடுகள் அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 5 : களத்தில் சந்திப்போம், ட்ரிப்
பிப்வரரி 12 : ஏலே, 100℅ காதல்
பிப்ரவரி 19 : சக்ரா, கமலி பிரம் நடுக்காவேரி
பிப்ரவரி 26 : டைட்டானிக், த சேஸ்
மார்ச் 26 : காடன்
ஏப்ரல் 2 : சுல்தான்
ஏப்ரல் 9 : கர்ணன்
ஏப்ரல் 14 : டாக்டர், துக்ளக் தர்பார்
மே 13 : மாநாடு
மேலே சொன்னவற்றைத் தவிர சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா, சர்வர் சுந்தரம், பாரிஸ் ஜெயராஜ், சமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளை யானை, சசிகுமார் நடித்துளள எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன், லாபம் உள்ளிட்ட படங்களையும் அடுத்த சில வாரங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
நேற்றுதான் தியேட்டர்களுக்கு 100 சதவீத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நான்கைந்து தயாரிப்பாளர் சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. இழுத்துக் கொண்டிருக்கும் முந்தைய பஞ்சாயத்துகள், வேறு பல பிரச்சினைகள் என ஒவ்வொரு படத்திற்கும் வெளியீட்டு சமயத்தில் ஏதோ ஒரு சிக்கல் வரும். அதனால், படங்களின் வெளியீட்டில் மாற்றங்கள் வரும்.
இத்தனை சங்கங்கள் வந்தாலும் சினிமாவில் பிரச்சினைகள் மட்டும் தீர்ந்தபாடில்லை. எப்போது அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்சினைகளை பேசி முடிக்கிறார்களோ அப்போதுதான் தமிழ் சினிமாவுக்கும் நல்ல காலம் பிறக்கும்.