பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
சென்னை, வடபழனி, பிரசாத் ஸ்டூடியோவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன் இசைப்பணிகளை செய்து வந்தார் இசைஞானி இளையராஜா. அந்த இடத்திலிருந்து ஸ்டுடியோ நிர்வாகம், அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இதுதொடர்பாக கோர்ட் வரை பிரச்னைகள் நடந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அவ்விடத்தில் இருந்து நீங்கிய நிலையில், தற்போது கோடம்பாக்கம் பழைய எம்.எம்.தியேட்டரில் புது ஸ்டூடியோவை இளையராஜா உருவாக்கி உள்ளார். இதன் திறப்பு விழா இன்று(பிப்., 3) நடக்கிறது. வெற்றிமாறன், இளையராஜா முதல் முறையாக இணையும் புதுப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்கிறார். இப்படத்திற்கான பாடல் ஒலிப்பதிவு இளையராஜாவின் புது ஸ்டூடியோவில் நடக்க உள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதி, ஜி.வி.பிரகாஷ்குமார் தங்கை பவானிஸ்ரீ முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு சத்தியமங்கலத்தில் நடந்து வருகிறது.