தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் | 50 ஆண்டு சினிமா பயணம் : ரஜினிக்கு அந்த ஒரு ஏக்கம் மட்டுமே...! | ராம் சரணின் அலைப்பேசி எண்ணை அவர் மனைவி எப்படி பதிந்து வைத்துள்ளார் தெரியுமா? |
சாஹோ படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சலார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயின். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் பெங்களூரை அடுத்த கோலார் தங்கவயலில் நடத்த திட்டமிட்டனர். அதற்கு கர்நாடக அரசு பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கவில்லை.
இதனால் படப்பிடிப்பை தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோதாவரிகணியில் உள்ள நிலக்கரி சுரங்கத்திலும், அதை சுற்றியுள்ள காடுகளிலும் படப்பிடிப்பபை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதி நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். நக்சலைட்டுகள் அச்சுறுத்தலால் இங்கு இதுவரை எந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்ததில்லை.
தற்போது சலார் படத்தின் படப்பிடிப்புக்கு நக்சலைட்டுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெலுங்கானா காடுகளை வணிக நோக்கத்திற்காக எடுக்கப்படும் சினிமாவுக்கு பயன்படுத்த அனுமதிக் க மாட்டோம். வெளியேறுங்கள் என நக்சலைட்டுகள் படத் தயாரிப்பு தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து பிரபாஸ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் ராமகுண்டம் நகர போலீஸ் கமிஷனரை சந்தித்து போலீஸ் பாதுகாப்பு கேட்டனர். இதையடுத்து படப்பிடிப்பில் 40 ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.