விவாகரத்து, கேன்சர் : இரண்டு வருட போராட்டத்தில் மம்முட்டியின் கதாநாயகி | பிளஷ்பேக் : குண்டு கல்யாணத்தை தெரியும், குண்டு கருப்பையாவை தெரியுமா? | பிளாஷ்பேக் : லலிதா பத்மினிக்காக உருவான நாவல் | ஜெயிலர் 2வில் வசந்த் இருக்கிறாரா? | அக்டோபர் முதல் பிக்பாஸ் சீசன் 9 : இந்தமுறை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா? விஜய் சேதுபதியா? | ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு | இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
படம் குறித்து சிம்பு கூறியிருப்பதாவது: எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மத நம்பிக்கை இல்லை. எல்லா கடவுளையும் ஒன்றாக பார்க்கிறேன். இந்தச் சமூகத்தில் பொதுவாகவே இஸ்லாமியர்கள் மீது ஒரு பார்வை இருக்கிறது. அதை மாற்றுவதற்கு ஏதாவது ஒன்று பண்ண வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். இந்தப் படத்தில் அந்த விஷயத்தைப் பேசுவதற்குக் கதை சரியாக அமைந்தது. அதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். வழக்கமான ஒரு கதையாக அல்லாமல், வித்தியாசமாக இருக்கும். என்றார்.
படம் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு கூறியிருப்பதாவது: மாநாட்டில் புதிதாக சில விஷயங்களை முயன்றுள்ளேன். ரசிகர்கள் அதைப் படம் பார்க்கும்போது உணர்வார்கள். இதுதான் கதை என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் காட்சிகளாகப் பார்க்கும்போது உடனே புரிந்துவிடக் கூடிய கதையாக இது இருக்கும்.
ஒரு மாநாட்டை வித்தியாசமான கண்ணோட்டத்தில் காட்டுவதற்கு முயற்சி செய்திருக்கிறேன். வேறமாதிரி ஒரு அரசியலைக் காட்டியிருக்கிறேன். படத்தின் களமே மாநாடுதான். ஒரு மாநாடு நடந்தால் அந்த ஊர் எப்படியிருக்கும், அதற்குள் என்ன நடக்கிறது என்பதுதான் படம் என்கிறார்.