ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடித்த கேஜிஎப் படம் 2018 டிசம்பரில் திரைக்கு வந்தது. பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று டப் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலுமே வசூல் சாதனை புரிந்தது. அதனால் மீண்டும் யாஷ்-பிரசாந்த் நீல் கூட்டணி கேஜிஎப் சாப்டர்-2 படத்திலும் இணைந்தது. இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை கடந்த ஆண்டு ஜூலை 20ந்தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு,2021 ஜூலை 16-ந்தேதி வெளியிடப்போவதாக தற்போது அறிவித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் யாஷ் வெளியிட்ட ஒரு டுவீட்டில் ஜூலை 16-ந்தேதி உங்கள் சீட் பெல்ட்டை நன்றாக போட்டுக் கொள்ள தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு டுவீட் போட, அது ரசிகர்களிடம் ஏராளமான லைக்ஸ் பெற்றது.
இந்த நிலையில், நடிகர் யாஷின் ரசிகர் ஒருவர், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், கேஜிஎப் -2 படம் வெளியாகும் வருகிற ஜூலை 16-ந்தேதியில் இப்படத்தை காண மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதனால் அன்றைய தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு இது ஒரு படம் மட்டுமின்றி எங்களது எமோஷன். எங்களது உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்றும் அந்த ரசிகர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யாஷ் ரசிகரின் இந்த கடிதமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.