இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் யுவன் யுவதி படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல். ஷோபனா, மஞ்சு வாரியரை போலவே, நடிகை ரீமா கல்லிங்கலும் நாட்டியத்தில் வல்லவர். அதனாலேயே பல மாணவர்களுக்கு நடனப்பயிற்சி அளிக்கும் விதமாக 'மாமாங்கம்' என்கிற நாட்டிய பள்ளியை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு துவங்கினார். நடிகை, தயாரிப்பாளர், நாட்டியப்பள்ளி நிறுவனர் ஒரே நேரத்தில் மூன்று வேலைகளையும் கவனித்து வந்த ரீமா கல்லிங்கல் தற்போது தனது நாட்டியப்பள்ளியை மூடுவதாக அறிவித்துள்ளார்,
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த கொரோனா காலகட்டம் எனது நாட்டியப் பள்ளியையும் விட்டு வைக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி இதை மூடுகிறேன். இந்த இடத்தில் நடனம் சொல்லி தந்தது, நடன ஒத்திகை பார்த்தது, திரைப்படங்களை திரையிட்டது, ஒர்க்ஷாப் நடத்தியது என பசுமையான நினைவுகள் நிறைய உள்ளன. நாட்டியப்பள்ளி தான் மூடப்படுகிறதே தவிர வரும் காலங்களில் மேடை நாடகங்களை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம்” என கூறியுள்ளார் ரீமா கல்லிங்கல்