தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சென்னை : வரும் சட்டசபை தேர்தலில், ரஜினி யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, கடைசி நேரத்தில் ஒதுங்கினார். இதனால், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பலரும், மாற்று கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.
இதற்கிடையே, ரஜினி மக்கள் மன்றம், எப்போதும் போல் செயல்படும். மற்ற கட்சிகளுக்கு போக விரும்புவோர், மன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம் என, ரஜினி அறிவித்தார். இதையடுத்து, ரஜினிக்கு நெருக்கமான அர்ஜுனமூர்த்தி, புதிய கட்சி துவக்கப் போவதாக தெரிவித்தார்.
அர்ஜுனமூர்த்தி கட்சி துவக்கினால், அதற்கும், ரஜினி மக்கள் மன்றத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை என, மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர், மன்ற மாவட்ட செயலர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார். அதில், வரும் சட்டசபை தேர்தலில், ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் லதா ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கப்போவதாக வரும் செய்தியும் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.