இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு 2021 - 23ம் ஆண்டுக்கான தேர்தல் பிப்., 14ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 22 யூனியன்கள் உடைய இவ்வமைப்பின் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலர் உள்ளிட்ட 13 பதவிகளுக்கு தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் தலைவராக ஆர்.கே.செல்வமணி, பொதுச் செயலாளராக அங்கமுத்து சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் உள்ளிட்ட 13 பேரும் போட்டியின்றி தேர்வாகினர். இதன்மூலம் செல்வமணி மூன்றாவது முறையாக பெப்சியின் தலைவராகி உள்ளார். விரைவில் இவர்கள் பதவியேற்க உள்ளனர்.