படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் சுமார் எட்டு மாத காலம் மூடப்பட்டு பின் திறக்கப்பட்டது. இருந்தாலும் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகம் வரவில்லை. அதையெல்லாம் விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவரும் போது மாற்றும் என்று நம்பினார்கள், அதன்படியே நடந்தது. கடந்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவந்தது. அதற்கடுத்து சிம்பு, நிதி அகர்வால் நடித்த 'ஈஸ்வரன்' படம் ஜனவரி 14ம் தேதி வெளிவந்தது.
இரண்டு படங்களுக்கும் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே மக்கள் தியேட்டர்கள் பக்கம் வந்தார்கள். 'மாஸ்டர்' படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து படம் பெரிய வசூலையும் பெற்றது. ஆனால், 'ஈஸ்வரன்' படத்திற்கு அப்படியே குறைந்து போனது. எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை.
இருந்தாலும் இரண்டு படங்களும் தற்போது 25வது நாளைக் கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. 'மாஸ்டர்' படம் ஓடிடியில் வெளிவந்த பின்னும் கடந்த பத்து நாட்களாக தியேட்டர்களில் ஓடி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த இரண்டு படங்கள் இந்த ஆண்டில் 25வது நாளைக் கடந்துள்ளது திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.