ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் |
'நானும் ரவுடிதான்' படத்திற்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.
இந்தக் கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளார் சமந்தா. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் ஆரம்பமாகியது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தில் பணிபுரிவது குறித்து சமந்தா மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். அது பற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது : “வலிமையான விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்களுடன் இணைந்து நடிப்பது எவ்வளவு சந்தோஷமானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படம் ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் என நிச்சயமாகச் சொல்வேன். இந்தப் பார்ட்டியை அசத்திக் கொண்டிருக்கிறீர்கள் விக்னேஷ் சிவன்,” என பாராட்டித் தள்ளுகிறார் சமந்தா.