சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
டிக் டாக்கில் கவர்ச்சியாகவும், ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்டு வந்த இலக்கியா இப்போது நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். துரைராஜ் இயக்கும் இப்படத்தில் அருண்குமார் நாயகனாக நடிக்க இவர்களுடன் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி ஆகியோர் நடிக்கிறார்கள். அடர்ந்த காடுகளில் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது. துரை ராஜன் இசையமைக்கிறார்.
"தனது மகளுக்குத் திருமணப் பரிசாக ஒரு பங்களாவை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார் தந்தை. வாங்குவதற்கு முன் அதை போய்ப் பார்த்து விட்டு வருமாறு மகளை வருங்காலக் கணவருடன் அனுப்பி வைக்கிறார். அந்த பங்களா காட்டுப் பகுதியில் உள்ளது. பார்க்கப்போனபோது உள்ளே நுழைந்ததும் அவர்களுக்குள் ஓர் அமானுஷ்ய சக்தி புகுந்து கொண்டு அவர்களை ஆட்டிவைக்கிறது .அது மட்டுமல்ல அவர்கள் மூலம் தனது எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் திரையில் வெளியாக உள்ளது''. என்கிறார் இயக்குனர் துரைராஜ்.