தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ரோஜா, பாசமலர், பூவே பூச்சூடவா உள்பட பல சீரியல்களில் நடித்தவர் ஷாமிலி சுகுமார். இவரது பெயரில் மர்மநபர் ஒருவர் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அதில், ஷாமிலி பற்றி அவதூறான கருத்துக்களும், இளைஞர் ஒருவருடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.
இது பற்றி ஷாமிலியின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அதில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வருபவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.
ஷாமிலியின் இந்த புகாரை அடுத்து சென்னை மாநகர காவல் துறை அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .