ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு பொங்கல் முதல் தியேட்டர்கள் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பியதாக தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதற்குக் காரணமாக 'மாஸ்டர்' படம் இருந்தது.
அதற்குப் பிறகு வெளிவந்த படங்கள் வியாபார ரீதியாக வசூலைப் பெற முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் “பாரிஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி, நானும் சிங்கிள்தான், கேர் ஆப் காதல், இது விபத்து பகுதி' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.
இவற்றில் 'பாரிஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி' ஆகிய படங்களுக்கு மட்டும் மிகக் குறைவான ரசிகர்கள் இன்று காலை காட்சிக்கு வந்திருக்கிறார்கள். மற்ற படங்களுக்கு ரசிகர்கள் வராத காரணத்தால் பல ஊர்களில் காலைக் காட்சிகளை ரத்து செய்திருக்கிறார்கள். மதியக் காட்சிகளுக்கும் இதே நிலைமைதான்.
பெரிய நடிகர்களின் படங்களை மட்டும் தியேட்டர்களில் போய்ப் பார்க்கலாம் என ரசிகர்கள் நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. சில படங்களைப் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுவதேயில்லை. அப்படிப்பட்ட படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதை விட ஓடிடி தளத்தில் வெளியிட்டாலாவது மக்கள் பார்ப்பார்கள்.
கொரோனா தாக்கம் தமிழ் சினிமாவை நிறையவே மாற்றிவிட்டது. இனி, சிறிய பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வரவேற்பு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.