இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். அதையடுத்து சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரைக்கு வந்து குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமாகி விட்டார்.
இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை அம்பத்தூரில் 143 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். அதோடு அங்கு கூடிய பொதுமக்களிடமும் மரக்கன்றுகளை நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
அதையடுத்து மீடியாக்களிடம் காதலர் தின குறித்து ரம்யா பாண்டியன் கூறுகையில், நாம் ரசிக்க வேண்டிய விசயங்களுக்கு நம்முடைய பங்களிப்பை கொடுக்க வேண்டும். முக்கியமாக மரங்களை வீட்டில் பால்கனி, மாடி அல்லது இப்படி மரம் நட்டு வளர்த்து சமூகத்திற்கு இயற்கைக்கும் பயன்படும் வகையில் செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், இந்த காதலர் தினத்தன்று இயற்கைக்கும் சமுதாயத்திற்கும் அன்பை காட்டுங்கள். நீங்கள் காதலர்களாக இருந்தால் உங்கள் காதலுக்கு அன்பை காட்டுங்கள். என்னைப்போன்று சிங்கிளாக இருந்தால் இயற்கையோடு அதிகமான அன்பை காட்டுங்கள் என்றும் ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.