சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! |

ஈஸ்வரன் படத்தை அடுத்து மாநாடு, பத்துதல படங்களில் நடிக்கும் சிம்பு அதையடுத்து கெளதம் மேனனின் புதிய படத்திலும் இணைகிறார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த திரிஷா நடிப்பார் என தெரிகிறது. இதனால் அப்படம் குறித்து ரசிகர்களுக்கிடையே இப்போதே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு அதிகமாக சென்று வரும் சிம்பு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்று கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி தரிசனம் செய்துள்ளார். நீண்டகாலமாகவே சிம்புவிற்கு திருமண தடை நீடித்து வருவதால் அதற்கான பரிகாரமாக இப்படி அவர் தீபம் ஏற்றியதாக செய்தி வெளியாகியுள்ளது. அதுகுறித்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சிம்பு.