பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

புச்சி பாபு இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அறிமுக நடிகர்கள் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நடித்து தெலுங்கில் வெளியான படம் 'உப்பெனா'. படத்தில் நாயகன், நாயகி அளவிற்கு படத்தின் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம் இது.
இப்படத்தைப் பற்றி விமர்சகர்களும், தெலுங்குத் திரையுலகத்தின் பல பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். அனைவரும் மறக்காமல் தமிழ் நடிகரான விஜய் சேதுபதியைப் பற்றியும் குறிப்பிடுவார்கள். ஆனால், நேற்று இப்படத்தைப் பற்றிப் பாராட்டி டுவீட் செய்த நடிகர் மகேஷ் பாபு, விஜய் சேதுபதி பற்றி எதுவுமே சொல்லவில்லை. வேண்டுமென்றே விஜய் சேதுபதியைப் பற்றி குறிப்பிடாமல் விட்டாரா அல்லது மறந்துவிட்டாரா என்று தெரியவில்லை. கமெண்ட்டுகளில் ரசிகர்கள் அது பற்றி கேட்டதற்கும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
“உப்பெனா, ஒரு வார்த்தையில்..கிளாசிக். இயக்குனர் புச்சிபாபு, நீங்கள் காலத்தால் மறக்க முடியாத ஒரு படத்தைக் கொடுத்துவிட்டீர்கள், உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உப்பெனா படத்தின் இதயம் தேவிஸ்ரீபிரசாத். சிறந்த இசைக்காக இந்தப் படம் நினைவு கூறப்படும். டிஎஸ்பி இதுவரையிலான உங்களின் சிறந்த படம் இது.
இரண்டு புதுமுகங்கள், மிகச் சிறந்த நடிப்பை வழங்குவது இதயத்தைத் தூண்டுகிறது. வைஷ்ணவ், கிரித்தி நீங்கள் இருவரும் ஸ்டார். கடைசியாக, இயக்குனர் சுகுமார், மைத்திரி நிறுவனம் ஆகியோருக்கு இப்படத்திற்குப் பின்னணியாக இருந்ததற்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
எல்லாரையும் பாராட்டியவர் விஜய் சேதுபதியை மறந்தது ஏனோ ?.