இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மறைந்த நடிகர் சிவாஜிகணேசன் காங்கிரஸ்காரராக இருந்தவர். பின்னர் புதிய கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தார். இந்தநிலையில், சிவாஜியின் மூத்த மகனும் நடிகருமான ராம்குமார் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.
இந்தநிலையில், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலாவை சரத்குமார், சீமான் ஆகியோர் சந்தித்ததை அடுத்து டைரக்டர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோரும் சந்தித்தனர். அதையடுத்து தற்போது நடிகர் பிரபுவும் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், சுதாகரன் இன்னும் 7 மாதங்கள் சிறையில் இருப்பார் என்று தெரிவித்த பிரபு, பாஜகவில் இணைந்துள்ள தனது அண்ணன் ராம்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதோடு நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. சசிகலாவை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் பிரபு.