தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகை அமலா பாலை விஜய், விக்ரம் ஜோடியாக நடிக்க வைத்து உயரத்துக்கு கொண்டு சென்றவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். அதுவே காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சுதந்திரமாக வாழ்ந்து பழகிய அமலாபாலால் கட்டுக்கோப்பான குடும்பத்திற்குள் வாழ முடியவில்லை. இதன் காரணமாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அமலாபால் பிசியாக நடிக்கத் தொடங்கி விட்டார்.
தற்போது அமலாபால் ஒரு வெப்சீரிஸில் கணவன் ஜெகபதி பாபுவால் துன்புறுத்தப்படும மனைவியாக நடித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸின் புரமோசனுக்காக அவர் அளித்த பேட்டில் தனது மணவாழ்க்கை, விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார்.
அது வருமாறு: நான் விவகாரத்து பெற்று பிரிய முடிவு செய்தபோது என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அனைவரும் என்னை பயமுத்தவே முயற்சித்தனர். வெற்றிகரமான நடிகையாக இருந்த போதிலும் அந்த சமயத்தில் பயத்துடனேயே வாழ்ந்தேன். எனது சந்தோஷம் மற்றும் மனநிலை பற்றி யாரும் கவலைப்படவில்லை என கூறியிருக்கிறார்.