திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா. ஒரு படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் 5 கோடி வரை என்கிறது கோலிவுட் வட்டாரம். மற்ற நடிகைகள் அவருடைய சம்பளத்தில் பாதி வரை தொட்டாலே அதிகம்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமானவர். அதன்பின் இங்கு நடிக்க வரவேயில்லை. தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு பூஜா ஹெக்டேவை கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதற்காக அவருக்கு 3.5 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, அந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு மேலும் பிரபலமாகலாம்.
அதோடு, பூஜாவிற்கு தெலுங்கு, ஹிந்தியிலும் மார்க்கெட் உள்ளதால் அவ்வளவு சம்பளத்தைக் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். பூஜா மீண்டும் தமிழுக்கு வந்தால் நயன்தாராவுக்குப் போட்டியாக மாறவும் வாய்ப்புள்ளது.