ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கியபோது, அவரது கணவரான சூர்யா அவர் கதையின் நாயகியாக நடிக்கும் படங்களை தனது 2டி பட நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
அதேபோல் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டுள்ள சாயிஷாவிற்கும் கதையின் நாயகியாக நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ள சாயிஷா, தற்போது டெடி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருப்பவர், தெலுங்கு-, கன்னடத்தில் தயாராகி வரும் யுவரத்னா என்ற படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது சாயிஷாவுக்கும் ஜோதிகா, நயன்தாரா, திரிஷாவைப் போன்று கதையின் நாயகியாக நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால் மனைவிக்காக தானே ஒரு படம் தயாரிக்கும் முடிவில் உள்ளார். இதற்காக சில இளவட்ட டைரக்டர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறார் ஆர்யா.