தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் “துருவங்கள் 16“, “இருட்டு அறையில் முரட்டு குத்து“, “நோட்டா“, “ஜாம்பி“ போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் சீசன் 2 மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அடுத்ததாக சல்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது“, “இவன் தான் உத்தமன்“, “ராஜபீமா“ என பிஸியாக நடித்து வருகிறார்.
சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர்களில் யாஷிகாவும் ஒருவர். அடிக்கடி தனது கவர்ச்சியான படங்களை பதிவிடுவது அவரது ஸ்டைல். இதனாலேயே அவருக்கு நிறைய பாலோயர்கள் உள்ளனர்.
இந்நிலையில் துபாய் விலங்கு நல பூங்கா ஒன்றில் தான் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார் யாஷிகா. அதில், அங்கிருக்கும் விலங்குகளோடு கொஞ்சி விளையாடும் யாஷியா, ஒட்டகம் ஒன்றிற்கு சிறு துண்டு இலையை தனது வாயில் வைத்துக் கொடுக்கிறார். ஒட்டகமும் அவரிடம் இருந்து அதைப் பிடுங்கி சாப்பிடுகிறது.
பார்ப்பதற்கு இந்தக் காட்சி காதலர்களின் ரொமான்ஸ் மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். கூடவே ஒட்டகத்திற்கு இலையைக் கையில் தரக் கூடாதா என திட்டவும் செய்துள்ளனர்.