ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம் 'சில நொடிகளில்'. மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ் ஜார்னரில் தயாராகி உள்ள இந்த படம் வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முழு படமும் லண்டனில் தயாராகி உள்ளது. படத்தில் ரிஷியும், புன்னகை பூ கீதாவும் அன்பான கணவன் மனைவி. இவர்களின் வாழ்க்கைக்கு இடையில் வருகிறார் மாடல் அழகி யாஷிகா ஆனந்த். ரிஷியின் முன்னாள் காதலி. அவருக்கு ஒரு பெரிய பிரச்சினை. இப்படியான கதையில் என்ன தீர்வு என்பதுதான் படம்.
படத்தில் நடித்திருப்பது பற்றி யாஷிகா ஆனந்த் கூறும்போது “நிஜத்தில் நான் ஒரு மாடல் அழகி. படத்திலும் மாடல் அழகியாக நடித்திருக்கிறேன். அதனால் நடிக்க மிகவும் எளிதாக இருந்தது. 'துருவங்கள் பதினாரு' என்ற திரில்லர் படத்தில் இருந்துதான் எனது சினிமா தொடங்கியது. நானும் திரில்லர் படத்தின் மிகப்பெரிய ரசிகை அதனால் இந்த படத்தில் விரும்பி நடித்தேன். ரிச்சர்டுடன் நடித்ததன் மூலம் அவர் எனக்கு நல்ல நண்பர் ஆனார். இதன் மூலம் நான் அஜித் சாருக்கும் நெருக்கமாகி இருக்கிறேன். அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகை நான். என்றார்.