இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர் தற்போது சுயேட்சையாக போட்டியிடுகிறார். விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார் மயில்சாமி.
அவர் கூறுகையில், ''நான் எம்ஜிஆரின் தீவிர பக்தன். பல ஆண்டுகாலம் அவரின் அரசியலை பார்த்தவன். தற்போது உள்ள சூழ்நிலையில் நான் கொதித்து போய் தான் களத்தில் இறங்கி உள்ளேன். அரசியலில் பலரும் சுயநலமாகவே செயல்படுகின்றனர். நான் இந்த ஏரியா மக்களிடம் பல ஆண்டுகளாக பழகி உள்ளேன். என்னிடம் காசு, பணம் இல்லை. அன்பு மட்டுமே உள்ளது. ரொம்ப சாதாரணமானவன். கமல் முதல் பலரும் என் நட்பு வட்டத்தில் இருந்தாலும் நான் எங்கும் செல்லவில்லை. எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க மாட்டேன்'' என்றார்.