இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள ஆக்ஷன் ஹீரோ சுரேஷ் கோபி. தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். தற்போது அவர் பாரதிய ஜனதாக கட்சியில் இருக்கிறார். வருகிற சட்டசபை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் சுரேஷ்கோபி நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுரேஷ்கோபி தற்போது பாப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை ஜோஷி இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் எர்ணாகுளத்தை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்து கொண்ட சுரேஷ் கோபிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. ஆனால் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் அவர் தேர்தல் பணிகளை கவனிப்பார் என்று தெரிகிறது.