சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மகாகவி காளிதாஸ் எழுதிய சகுந்தலம் காவியம் தெலுங்கில் சினிமாவாகிறது. இதனை பிரபல தெலுங்கு இயக்குனர் குணசேகரன் இயக்குகிறார். சகுந்தலையாக சமந்தாவும், அவரது காதலன் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடிக்கிறார்கள். நேற்று இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இதில் கலந்து கொண்ட சமந்தா, நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை நிறைய படங்களில் நடித்து விட்டேன். கமர்ஷியல் படம் முதல் த்ரில்லர் படம் வரை நடித்து விட்டேன். அவைகள் எனக்கு எளிதாக இருந்தது. காரணம் அதற்கு பெரிய மெனக்கெடல் தேவையில்லை. ஆனால் சகுந்தலை அப்படி அல்ல. இளவரசியாக நடிக்க போகிறேன் என்கிற பெருமை ஒருபுறம் இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டுமே என்கிற கவலை மறுபுறம் இருக்கிறது. நிறைய நகைகள் அணிந்து பளபள உடைகள் அணிந்து சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் சகுந்தலம் படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. என்றார்.