ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மகாகவி காளிதாஸ் எழுதிய சகுந்தலம் காவியம் தெலுங்கில் சினிமாவாகிறது. இதனை பிரபல தெலுங்கு இயக்குனர் குணசேகரன் இயக்குகிறார். சகுந்தலையாக சமந்தாவும், அவரது காதலன் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடிக்கிறார்கள். நேற்று இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இதில் கலந்து கொண்ட சமந்தா, நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை நிறைய படங்களில் நடித்து விட்டேன். கமர்ஷியல் படம் முதல் த்ரில்லர் படம் வரை நடித்து விட்டேன். அவைகள் எனக்கு எளிதாக இருந்தது. காரணம் அதற்கு பெரிய மெனக்கெடல் தேவையில்லை. ஆனால் சகுந்தலை அப்படி அல்ல. இளவரசியாக நடிக்க போகிறேன் என்கிற பெருமை ஒருபுறம் இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டுமே என்கிற கவலை மறுபுறம் இருக்கிறது. நிறைய நகைகள் அணிந்து பளபள உடைகள் அணிந்து சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் சகுந்தலம் படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. என்றார்.