இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் எஸ்.பி.ஜனநாதனும் முக்கியமானவர். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர், இப்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை எடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த இவர், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஞாயிறு அன்று மரணத்தை தழுவினார். அவரின் திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை தந்தது.
அவர் மறைந்து இரு தினங்கள் ஆன நிலையில் அவரது வீட்டில் மற்றுமொரு சோகம் நிகழ்ந்துள்ளது. சகோதரரின் மறைவு தாங்க முடியுமாமல் ஜனநாதனின் சகோதரி லட்சுமி, மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். ஜனநாதன் வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு இழப்புகள் அவரது குடும்பத்தை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.