Advertisement

சிறப்புச்செய்திகள்

தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பாதிக்கப்பட்ட நடிகைக்கு தான் ஆயுள் தண்டனை : நீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகை பாக்கியலட்சுமி கருத்து

13 டிச, 2025 - 03:34 IST
எழுத்தின் அளவு:
Life-imprisonment-for-the-victim-actress-Actress-Bhagyalakshmis-comments-on-the-court-verdict
Advertisement

கேரளாவில் கடந்த 2017ம் வருடம் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானார். அது வீடியோவாகவும் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு அப்போது மிகப்பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் திலீப் உள்ளிட்ட நால்வர் இந்த வழக்கில் குற்றம் அற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர். முதன்மை குற்றவாளி பல்சர் சுனில் உள்ளிட்ட மீதி ஆறு பேருக்கு ஐம்பதாயிரம் அபராதமும் 20 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக இத்தனை வருடங்கள் குரல் கொடுத்து வந்த பலருக்கும் குறிப்பாக நடிகைகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த பாதிக்கப்பட்ட நடிகையின் சார்பாக எப்போதுமே குரல் கொடுத்து வந்த மலையாள டப்பிங் கலைஞரும் நடிகையுமான பாக்கியலட்சுமி இந்த தீர்ப்பு குறித்து கூறும்போது, “குற்றவாளிகளுக்கு வெறும் 20 வருட சிறை தண்டனை தான். ஆனால் பாதிக்கப்பட்ட அந்த நடிகை தான் ஆயுள் முழுவதும் மானசீகமான தண்டனையை அனுபவிக்க போகிறார். என்ன விதமான அநீதி இது ? எதை அர்த்தப்படுத்துகிறது ? குற்றவாளிகளின் வயது, அவர்கள் வாழ்க்கை, அவர்களது பெற்றோர் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். அப்படியானால் பாதிக்கப்பட்டவருக்கு அம்மா இல்லையா ? வாழ்க்கை இல்லையா ? வயது இல்லையா ? இது அநீதி. ஏற்றுக்கொள்ளவே முடியாதது” என்று கூறியுள்ளார். அதேபோல நடிகை பார்வதியும் இந்த தீர்ப்பை விமர்சித்து பெண்கள் வாழ்வதற்கு என எந்த ஒரு நாடும் இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தியேட்டரில் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் : சமாதானப்படுத்திய நடிகைதியேட்டரில் இயக்குனருக்கும் ... 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in