படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் சில பாடல்கள் யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில் 'எப்படி இருந்த நாங்க' என்ற நகைச்சுவைப் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. விவேக் மெர்வின் இசையமைப்பில் அந்தோணி தாசன் பாடியுள்ள அந்தப் பாடலின் சிறு வீடியோவைப் பகிர்ந்து ராஷ்மிகா படம் பற்றியும் தெரிவித்துள்ளார்.
“இந்த வீடியோவையும் பாடல் வரிகளையும் கேளுங்கள்.. இதைவிட சிறப்பாக இருக்க முடியாது. இந்தக் குறிப்பிட்ட காட்சி படமாக்கப்படும் போது நானும் அதைத்தான் நினைத்தேன். இந்தக் கதாபாத்திரத்தை நான் எவ்வளவு ரசித்து நடித்தேன் என்பதை நீங்கள் விரைவில் பார்க்கப் போகிறீர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாடலில் ஒரு நிலத்தில் குட்டி டிராக்டரை வைத்து அவர் உழும் காட்சி இடம் பெற்றுள்ளது. சேற்றில் குட்டி டிராக்டரை ஓட்டுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அதிலும் ஒரு பெண் ஓட்டுவதற்கு சிரமமாக இருக்கும். அக்காட்சியில் ராஷ்மிகா அதை நன்றாகவே செய்திருக்கிறார். தான் அந்தக் காட்சியில் நடிக்க சிரமப்பட்டதும் அதற்கேற்றாற் போல பாடல் வரி 'எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம், வான்ட்டடா வந்து மாட்டிக்கிட்டோம்” என பொருத்தமாக இருப்பதைத்தான் ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.