தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
கடந்த வருடம் வெளியான 'அல வைகுந்தபுரம்லோ' படத்தின் மூலம் இளைஞர்களை கிறங்கடித்த பூஜா ஹெக்டே, குறிப்பாக அதில் இடம்பெற்ற 'புட்டபொம்மா' பாடலின் மூலம் குழந்தைகளையும் கவர்ந்தார். அந்தப்படத்தில் அவர் அணிந்து நடித்திருந்த உடைகள் எல்லாமே அவரை மேலும் அழகாக்கி காட்டின. இந்த உடைகள் குறித்தும், அல வைகுண்டபுரம்லோ படக்குழுவினரிடம் இருந்து, தன்னை தேடிவந்த எதிர்பாராத பரிசு குறித்தும் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.
“இந்தப்படத்தில் நடித்தபோது என்னுடைய உடைகள் அனைத்தையும் ஒரு பெட்டியிலேயே வைத்து பொக்கிஷமாக பாதுகாத்து வந்தனர். நான் அந்த உடைகளை விரும்பி அணிந்தாலும், அவற்றில் ஒன்றைக்கூட எனது வீட்டிற்கு எடுத்து செல்லவில்லை. ஆனால் இந்தப்படத்தில் நான் பயன்படுத்திய சைக்கிள் மீது மட்டும் எனக்கு ரொம்பவே ஒட்டுதல் ஏற்பட்டது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட படக்குழுவினர், படப்பிடிப்பு முடிந்து நான் மும்பை சென்ற சில நாட்களிலேயே, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலமாக அந்த சைக்கிளை எனக்கே அனுப்பி வைத்துவிட்டனர். அந்தப்படத்தில் பணியாற்றியதன் ஞாபகார்த்தமாக இப்போது என் வீட்டை அலங்கரிக்கிறது அந்த சைக்கிள்” என கூறியுள்ளார் பூஜா ஹெக்டே..