பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் |
கடந்த வருடம் வெளியான 'அல வைகுந்தபுரம்லோ' படத்தின் மூலம் இளைஞர்களை கிறங்கடித்த பூஜா ஹெக்டே, குறிப்பாக அதில் இடம்பெற்ற 'புட்டபொம்மா' பாடலின் மூலம் குழந்தைகளையும் கவர்ந்தார். அந்தப்படத்தில் அவர் அணிந்து நடித்திருந்த உடைகள் எல்லாமே அவரை மேலும் அழகாக்கி காட்டின. இந்த உடைகள் குறித்தும், அல வைகுண்டபுரம்லோ படக்குழுவினரிடம் இருந்து, தன்னை தேடிவந்த எதிர்பாராத பரிசு குறித்தும் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.
“இந்தப்படத்தில் நடித்தபோது என்னுடைய உடைகள் அனைத்தையும் ஒரு பெட்டியிலேயே வைத்து பொக்கிஷமாக பாதுகாத்து வந்தனர். நான் அந்த உடைகளை விரும்பி அணிந்தாலும், அவற்றில் ஒன்றைக்கூட எனது வீட்டிற்கு எடுத்து செல்லவில்லை. ஆனால் இந்தப்படத்தில் நான் பயன்படுத்திய சைக்கிள் மீது மட்டும் எனக்கு ரொம்பவே ஒட்டுதல் ஏற்பட்டது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட படக்குழுவினர், படப்பிடிப்பு முடிந்து நான் மும்பை சென்ற சில நாட்களிலேயே, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலமாக அந்த சைக்கிளை எனக்கே அனுப்பி வைத்துவிட்டனர். அந்தப்படத்தில் பணியாற்றியதன் ஞாபகார்த்தமாக இப்போது என் வீட்டை அலங்கரிக்கிறது அந்த சைக்கிள்” என கூறியுள்ளார் பூஜா ஹெக்டே..