சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். ரஜிஷா, லட்சுமி பிரியா, யோகிபாபு, லால் என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். ஏப்., 9ல் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலை ஒரு நாட்டுப்புறப்பாடலை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. அதையடுத்து தற்போது பண்டாரத்தி புராணம் என்ற பாடலில் தமிழகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாகவும், அதை நீக்கும் வரை கர்ணன் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று கோரியும், மதுரை சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த புல்லட் ரவி என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தயாரிப்பாளர் எஸ்.தாணு, டைரக்டர் மாரிசெல்வராஜ், திங்க் மியூசிக் இந்தியா, யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.