பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். ரஜிஷா, லட்சுமி பிரியா, யோகிபாபு, லால் என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். ஏப்., 9ல் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலை ஒரு நாட்டுப்புறப்பாடலை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. அதையடுத்து தற்போது பண்டாரத்தி புராணம் என்ற பாடலில் தமிழகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாகவும், அதை நீக்கும் வரை கர்ணன் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று கோரியும், மதுரை சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த புல்லட் ரவி என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தயாரிப்பாளர் எஸ்.தாணு, டைரக்டர் மாரிசெல்வராஜ், திங்க் மியூசிக் இந்தியா, யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.