போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று சங்க வளாகத்தில் உள்ள அரங்கில் நடந்துது. சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமை தாங்கினார். இதில் சங்க உறுப்பினர்களுடன் துணை தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் மன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திரையுலம் சந்தித்து வரும் பல பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தியேட்டர்களின் விபிஎப் கட்டணம், ஓடிடியில் படங்கள் வெளியீடு, பெப்சி தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து பேசப்பட்டது. கூட்டத்தில் ஓடிடி வெளியீடு குறித்து தியேட்டர் அதிபர்கள் சங்கம் பிடிவாதம் பிடிப்பதையும், விபிஎப் கட்டணத்தை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள் குறித்தும் உறுப்பினர்கள் காரசாரமாக பேசினார்கள்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அதில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது : சினிமா இப்போது சிக்கலான காலகட்டத்தில் உள்ளது. மக்கள் தியேட்டருக்கு வருவதில்லை. தியேட்டர்காரர்கள் விபிஎப் கட்டணத்தை கட்டுவதாக இல்லை. ஓடிடி தளம் ஒன்றுதான் ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறது. அதையும் கூடாது என்று மறுக்கிறார்கள். இதுகுறித்து விரிவாக பேசினோம்.
தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை எப்படி வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம். அது அவர்கள் உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. புதிதாக தொடங்கப்பட்டுள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், அந்த சங்கத்தில் நிர்வாகத்தில் இருப்பவர்களை இந்த சங்கத்தில் இருந்து நீக்கவும் முடிவு செய்திருக்கிறோம். பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை, விபிஎப் கட்டண பிரச்சினைகளை செயற்குழு கூட்டத்தில் பேசி முடிவெடுக்க தீர்மானித்துள்ளோம். என்றார்.