2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தென்னிந்திய சினிமா வரலாற்றில் மகத்தான வசூல் சாதனை படைத்த படம் பாகுபலி ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்கள். உலகம் முழுக்க வெளியாகி வசூலை குவித்தது. இரண்டு பாகங்களின் கதைப்படி எல்லாமே நிறைவடைந்து விட்டது. இதனால் 3ம் பாகத்துக்கான ஸ்கோப் இல்லை என்ற கூறப்பட்டு வந்தது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் 3ம் பாகம் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் பாகுபலியின் 3ம் பாகத்தை தயாரிக்க கார்பரேட் ஓடிடி தளம் ஒன்று முன்வந்திருக்கிறது. இதற்காக அது 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்க தயாராக இருப்பதாக இயக்குனர் ராஜமவுலியிடம் பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளது. 9 எபிசோட்களை கொண்ட தொடரா இதனை தயாரிக்க அந்த நிறுவனம் விரும்புகிறது. இதற்கு ராஜமவுலி ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.
தற்போது ஆர்ஆர்ஆர் படத்தில் பிசியாக இருக்கும் ராஜமவுலி அந்த பணிகளை முடித்து விட்டு இதில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.