ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை விவாவகரத்து செய்து விட்டார். தற்போது பிரபல சர்வதேச பேட்மிட்டன் வீராங்கணை ஜூவாலா கட்டாவை தீவிரமாக காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள். அதோடு ஜூவாலா கட்டாவின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆர்வமாக இருக்கிறார் விஷ்ணு விஷால்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : என் வாழ்க்கையில் காதல், கல்யாணம் எல்லாமே முடிந்து விட்டது. இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை. ஜூவாலா கட்டாவுடன் இருப்பது காதல் அல்ல, பரஸ்பர மரியாதைதான். எனது நலனின் அவரும், அவர் நலனில் நானும் அக்கறையுடன் இருக்கிறோம். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பேன். அவர் விளையாடுவார். அவரது பேட்மிட்டன் அகாடமியை தொடர்ந்து நடத்துவார்.
ஜூவாலா கட்டா தனது வாழ்க்கை கதையை என்னிடம் கூறியிருக்கிறார். அதில் அவர் சந்தித்த சவால்கள், அவமானங்கள், விமர்சனங்கள் அனைத்தையும் சொன்னார். அதில் ஒரு சினிமாவுக்கான விஷயங்கள் இருக்கிறது. அதை நான் திரைப்படமாக எடுக்க இருக்கிறேன். இதற்கு நிறைய பணம் வேண்டும் உங்களிடம் இருக்கிறதா என்று அவர் கேட்டார். அந்த பணத்தை நான் சம்பாதித்து விட்டு தயாரிக்கிறேன் என்று கூறியிருக்கிறேன். இப்போது எனது மூன்றாவது படத்தை தயாரித்து வருகிறேன். இன்னும் நிறைய படங்கள் தயாரிக்க இருக்கிறேன். என்றார்.