அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - சூர்யா கூட்டணியில் வெளிவந்த 'கஜினி, ஏழாம் அறிவு' ஆகிய இரண்டு படங்களும் தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படியான படங்களாக அமைந்தன. அந்தக் கூட்டணி கடந்த 10 வருடங்களாக மீண்டும் இணையாமல் உள்ளது. விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் தான் முதலில் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், சில காரணங்களால் அவர் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார்.
இதனிடையே, தன்னுடைய அடுத்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க வேண்டும் என முருகதாஸ் முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். மீண்டும் அவரும் சூர்யாவும் இணையும் படமாகவும் அது இருக்கலாம் என்கிறார்கள். அந்தப் படத்தை உலக அளவில் கொண்டு சேர்க்கக் கூடிய படமாக உருவாக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கப் போகிறார். அவற்றை முடித்துவிட்டு முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் சொல்கிறார்கள்.