நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாநாடு'. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றது. ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.
இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான மாநாடு அரங்கம் ஒன்று கடந்த ஒரு வார காலமாக அமைக்கப்பட்டு வந்தது. அந்த வேலைகள் முடிவடைந்து இன்று அல்லது நாளை அங்கு கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். இதில் படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இப்படத்திற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து சிம்பு நடித்து வருவதாகச் சொல்கிறார்கள். கொரோனா காலத்திலும் படப்பிடிப்புக்குத் தவறாமல் வருகை தந்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது 'மாநாடு'.