விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

தமிழ்த் திரையுலகம் கடந்த ஒரு வருட காலமாக கொரானோ தொற்று பாதிப்பால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் சரியான வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து ஓடிடி தளத்திற்காக 'நவரசா' என்ற ஆந்தாலஜி படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை சினிமா தொழிலளார்களுக்கு உதவி செய்ய அளித்துள்ளார்கள்.
அந்த வகையில் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தொழிலளார்களுக்கு இந்த மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் மாதத்திற்கு 1500 ரூபாய் உதவித் தொகையை வழங்கியுள்ளார்கள். அதன் மூலம் சுமார் அந்த சங்கத்தைச் சேர்ந்த 700 உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள்.
அவர்களின் உதவிக்கு சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராம் நன்றி தெரிவித்துள்ளார்.