திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குனர் எனப் பெயரெடுத்த ஷங்கர் மீது சமீபத்தில் அவர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது.
'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் அவர் அடுத்து இயக்க உள்ள தெலுங்குப் படத்தை இயக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியது. ஆனால், ஷங்கர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் அவர் மீது தடை விதிக்க முடியாதென நீதிமன்றம் கூறிவிட்டது.
இதனிடையே, ஷங்கர் அடுத்து இயக்க உள்ள தெலுங்குப் படம் குறித்து தமிழ்த் திரையுலகின் சீனியர் தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரி வழக்கு தொடுக்கத் தயாராக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஷங்கர் இயக்க உள்ள தெலுங்குப் படத்தின் கதை தன்னுடையது என சின்னச்சாமி என்பவர் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை ஷங்கருக்கு அனுப்பியுள்ளாராம். சின்னச்சாமி சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சௌத்ரியிடம் பணிபுரிபவராம்.
'இந்தியன் 2' வழக்கு விவகாரம் பற்றியே எந்த வித அறிக்கையும் விடாத ஷங்கர் இதையும் கண்டுகொள்வாரா என்பது சந்தேகம்தான் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.