தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

கொரோனாவின் அடுத்த பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த சில நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அரசு அறிவித்துவிட்டது. அதைத் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் அது போல அறிவிப்பு வரலாம் என்ற சந்தேகம் தயாரிப்பாளர்களிடம் வந்துள்ளது.
தமிழில் நேற்று வெளியான 'சுல்தான்' படம் தெலுங்கிலும் வெளியாகி உள்ளது. அங்கும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. அடுத்த வாரம் தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படம் வெளியாக உள்ளது. ஆனால், மக்களிடையே நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மீண்டும் லாக்டவுன் வரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் பலர் டென்ஷன் ஆகியுள்ளனர்.
மேலும், 'கர்ணன்' படத்தை தென்னிந்திய மாநிலங்களில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒருவேளை 50 சதவீத இருக்கைகள் என்றால் அது படத்தின் வசூலை பாதிக்கலாம். அதோடு அதற்கடுத்து படங்களை வெளியிட திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை வெளியிட முடியாத நிலையும் ஏற்படலாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் டென்ஷன் போக வேண்டுமென்றால் லாக்டவுன் வராமல் இருக்க வேண்டும். இருந்தாலும் அதைப் பற்றி அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும்.