தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஒரு புதிய படம் திரைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே பைரசி தளங்களில் வெளிவந்து அந்தப் படத்தின் வருவாயைக் கெடுத்து வருகிறது. காலம் காலமாக நடந்து வரும் இந்தத் திருட்டிற்கு இதுவரை எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை.
டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இது போன்ற பைரசி லின்க்குகள் கொட்டிக் கிடக்கின்றன. கார்த்தி, ராஷ்மிகா நடித்து நேற்று முன்தினம் வெளிவந்த 'சுல்தான்' படத்தின் பைரசி லின்க்கை அதன் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவின் டுவிட்டரில் கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார் ஒருவர். அதில், “சுல்தான்' படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
தன் பக்கத்தின் கமெண்ட்டிலேயே இப்படி ஒரு பதிவு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “அடேய், என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரசி பிரமோட் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டீங்களா, இதோ வரேன்டா” எனப் பதிவிட்டுள்ளார்.
ஒரு தயாரிப்பாளரின் பக்கத்திலேயே பைரசி லின்க்கைப் பதிவிடும் அளவிற்கு பைரசி திருடர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்பது திரையுலகினருக்கு விடப்பட்டுள்ள மிகப் பெரும் சவால்.